Friday 31 December 2010

Mangayar Ulagam

Mangayar Ulagam

New Year SPL TOP 10 Comedy 2010

Wednesday 22 December 2010

Funniest Clips

Battle at Kruger

Tuesday 21 December 2010

Leoni - Siripom Sindhipom

Monday 20 December 2010

Mangayar Ulagam

Special Interview With Seeman

Leoni - Siripom Sindhipom

Leoni - Siripom Sindhipom

Sunday 19 December 2010

Leopard Cub Vs King Cobra

Wednesday 15 December 2010

Mynaa Songs

Mangayar Ulagam

Sunday 12 December 2010

Sangeethagalin Sangamam

Suvaiyo Suvai 12-12-2010

Latest Tamil Movie Video Songs Collection

Saturday 11 December 2010

Alavandaan

Sachien

Roja

Duet



Watch Duet - Tamil Movie directed by K. Balachander, Music by A.R. Rahman starring Prabhu, Meenakshi Seshadri, Ramesh Arvind, Sarath Babu, Charlie, Senthil, Prakash Raj, Mohan Ram & Damu.

Azhagan



Mammootty, Bhanupriya, Geetha & Madhubala

Baashha

Gunaa

Friday 10 December 2010

காஞ்சிவரம்


பழமொழி

  1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  2. பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  3. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  4. பக்கச் சொல் பதினாயிரம்.
  5. பசியுள்ளவன் ருசி அறியான்.
  6. பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  7. பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  8. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  9. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  10. படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  11. படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  12. படையிருந்தால் அரணில்லை.
  13. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  14. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  15. பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  16. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  17. பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  18. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  19. பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  20. பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  21. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

Wednesday 8 December 2010

god - ganapathy song

Rajnikanth - Vadivelu in Muthu

Leoni - Siripom Sindhipom

Vadivel Comedy

Mangayar Ulagam

Tamil hit songs

Tuesday 7 December 2010

Mangayar Ulagam

Suvaiyo Suvai - Samaiyal

Mangayar Ulagam

Saturday 4 December 2010

சிவபுராணம்


முன்னுரை :
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.

திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிமலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள். 

பதிகமும் உரையும்.

 

திருச்சிற்றம்பலம் 

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

(பொருள்)


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

(பொருள்)


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

(பொருள்)


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

(பொருள்)


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

(பொருள்)


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

(பொருள்)


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

(பொருள்)


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

(பொருள்)


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

(பொருள்)


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

(பொருள்)


மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

(பொருள்)


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

(பொருள்)


தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

(பொருள்)


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

(பொருள்)


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

(பொருள்)


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

(பொருள்)


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

(பொருள்)


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

(பொருள்)


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

(பொருள்)

திருக்குறள்-பிறனில் விழையாமை

151. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை,

உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும்

ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.


152. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள்

அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை

 மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.


153. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம்

தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன்,

உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.


154. எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச்

சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது,

 எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.


155. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதாக அடையலாம் என எண்ணிப்

பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக

நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.


156. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க

 நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி

ஆகிய நான்கும் நீங்குவதில்லை.


157. அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை

நாடிச் செல்லாதவனே அறவழியில்

இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.


158. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு.

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன்

நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று

அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.


159. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே

 கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை

அடைவதற்குத் தகுதியுடையவர்.


160. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது

அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.

திருக்குறள்-ஒழுக்கம் உடைமை

141. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்,

அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.


142. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில்

ஒழுக்கமே சிறந்த துணை என்பதால்,

எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.


143. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான்

 உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.

ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள்

இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.


144. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால்

மீண்டும் படித்துக் கொள்ள முடியும் ஆனால்,

பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து

அவன் தவறினால் இழிமகனே ஆவான்.


145. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும்

அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.


146. ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால்

ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம்

குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.


147. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்

 இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.


148. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக

அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.


149. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச்

 சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.


150. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம்

எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள்

பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்

Friday 3 December 2010

மாசு மருவற்ற முகம் வேண்டுமா?


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:

பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும்.
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
நகை அணிந்து கருத்துப்போய் உள்ள கழுத்துப்பகுதிகளிலும் தடவினால் கருப்பு நிறம் மாறும்.
மஞ்சள் தூள் - 10 கிராம் எடுத்து, அதனுடன் ஆரஞ்சு சாறு 100 மில்லி கலந்து முகம் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் மற்றும், வெயிலால் கருத்துப்போன பகுதிகள் நிறம் மாறும்.
கேரட் சாறு - 50 மி.லி., அன்னாசிப்பழச் சாறு - 50 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கருத்தப் பகுதிகள் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு 1 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கருமை மாறி முகம் பளிச்சிடும்.
ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.
சந்தனத்தூள் - 10 கிராம், எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் குளிப்பதற்கு முன் உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
வறண்ட முகம் பளபளக்க:
கறிவேப்பிலையையும், மருதாணி இலைகளையும் தனித்தனியே நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, 
கறிவேப்பிலை பொடி 1/2 டீஸ்பூன், மருதாணி பொடி 1/2 டீஸ்பூன் எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
தேன் - 1 டீஸ்பூன், தக்காளிச்சாறு - 1 டீஸ்பூன் எடுத்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூச கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

கூந்தலின் வளர்ச்சிக்கு

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்
கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்
தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.
ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

தண்ணீரை மாற்றினால்!
வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ளூர் தண்ணீரை குடித்துவிட்டு, வெளியூர் தண்ணீர் குடித்தால், ஒத்துக்கொள்ளாது என்பது சிலருக்கு தெரியாது. குடித்த பின்னர் தொல்லை வரும் போதே உணர்வர். சிலர் ஊர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும் போது, அவர்கள் குளிக்க பயன்படுத்து தண்ணீர் தன்மையும் மாறுகிறது. இதனால், பாதிக்கப்படுவது அவர்களின் தலைமுடி தான்.
கவலைப்பட்டாலும்...
மேற்கண்ட இரண்டைக் காட்டிலும், முக்கியமானது கவலை தான். ஒருவரின் கவலை தான், அவரின் தலைமுடி கொட்டவும் காரணம். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும்.
இதுக்கு என்ன செய்யணும்?
தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த "டைப்" என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள "டீப் கிளீன்சிங்" ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தினால் நல்லது.
வழுக்கை விழுதே...
ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு "முடி"வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகிவிடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.
முடிவெட்ட நாலணா
நாலணா கொடுத்து தலைமுடியை கத்தரித்துக்கொள்ளும் காலம் போய்விட்டது; சிகையலங்கார கூடத்தில் போய் முடிவெட்டும் போக்கு, இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பியூட்டி பார்லர் போகாத பள்ளிச்சிறுமிகள் இல்லை. அந்த அளவுக்கு அழகாக்கிக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
மாதம் பல ஆயிரம் வரை செலவழிப்பவர்களும் உண்டு. அதனால், சந்தையில் கண்ட கண்ட ஆயில்கள், ஷாம்பூக்கள் குவிந்து வருகின்றன. தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள், இந்த தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வரும் ஆபத்து குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.
புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் முடி, ஆயில் முடியா, வறண்ட முடியா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதோ எளிய வழி. ஒரு "பிளாட்டிங்" பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். தலைமுடியில் மிதமாக அழுத்தி, ஒரு நிமிடம் வரை வைத்திருங்கள். இப்போது எடுத்துப்பாருங்கள்; பேப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால், உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று பொருள். அப்படியில்லாமல், பேப்பரில், தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால், உங்கள் தலைமுடி, வறண்ட தன்மை கொண்டது.
நீண்ட கூந்தலா?
நீங்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணியாற்றுகிறீர்கள் என்றால், உங்களால், தலைமுடியை பராமரிக்க போதுமான நேரம் இருக்காது. அதனால், தோளில் பரவும் வகையில் தலைமுடியை குறைத்துக்கொள்ளலாம். முடியை எப்போதும் "ட்ரிம்" செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வறண்டுபோய் விடும். கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்த தெரிய வேண்டும்.
கலரிங் கொடுமை
ஆண், பெண்களில் கலரிங் என்ற பெயரில் பெரும் கொடுமை நடக்கிறது. தரம் குறைவான பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தவே கூடாது. ஆரம்பத்தில், முடியை பார்க்க பேஷனாகத்தான் இருக்கும். போகப்போக, கேவலமாக போய்விடும்.
எந்த சத்து தேவை?
முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் "பெர்ரட்டின்" அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.

சுக்கு காப்பி



    * சுக்கு - ஒரு துண்டு
    * மிளகு - ஒரு தேக்கரண்டி
    * இலவங்கம் - 3
    * பனைவெல்லம் - ஒரு கட்டி (சுவைக்கேற்ப)
    * துளசி இலை - ஒரு கைப்பிடி
    * காபிப்பொடி - ஒரு தேக்கரண்டி
    * தண்ணீர் - 2 கப்


  1. மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சுக்கு, மிளகு, லவங்கம் இவற்றை போட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  3. பின்னர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் காபிப்பொடி, அரைத்தபொடி இரண்டையும் போடவும்.
  4. அதன் பிறகு பனைவெல்லத்தை உடைத்து அதில் போடவும்.
  5. பிறகு துளசி இலைகளை போடவும்.
  6. நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி வைக்கவும்.
  7. சுவையான சுக்கு காபி ரெடி.