Monday 28 February 2011

Saturday 26 February 2011

படித்ததில் பிடித்தது - கணணி செய்தி

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு

  1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
  2. இப்போது www.spypig.com  இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.
  3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள். 
  4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.
  5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள். 
  6. நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.  
Enhanced by Zemanta

Friday 25 February 2011

Nayantara

Crime Dairy Special


இரங்கநாதன் கோவில்

செக்ஸ் மருத்துவ மாந்திரியர்


பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.

Thursday 24 February 2011

live world cup cricket 1987–1996

Year
Host Nation(s)
Final Venue
Final
Winner
Result
Runner-up
1975
 
West Indies

291/8 (60 overs)
WI won by 17 runs Scorecard
Australia

274 all out (58.4 overs)
1979
 West Indies

286/9 (60 overs)
WI won by 92 runs Scorecard
England

194 all out (51 overs)
1983
India

183 all out (54.4 overs
Ind won by 43 runs Scorecard
West Indies

140 all out (52 overs)
1987
Australia

253/5 (50 overs)
Aus won by 7 runs Scorecard
England

246/8 (50 overs)
1992
Pakistan

249/6 (50 overs)
Pak won by 22 runs Scorecard
England

227 all out (49.2 overs)
1996
Sri Lanka

245/3 (46.2 overs)
SL won by 7 wickets
Australia

241/7 (50 overs)
1999
Australia

133/2 (20.1 overs)
Aus won by 8 wickets Scorecard
 
Pakistan

132 all out (39 overs)
2003
Australia

359/2 (50 overs)
Aus won by 125 runs Scorecard
India

234 all out (39.2 overs)
2007
Australia

281/4 (38 overs)
Aus won by 53 runs (D/L) Scorecard
Sri Lanka

215/8 (36 overs)
2011

Tuesday 22 February 2011

Funny hidden cam with tiger


Monday 21 February 2011

ஆட்டுக்கறி

தேவையான பொருட்கள்:

  1. மட்டன் - 1/4 கிலோ 
  2. பூண்டு - 8 
  3. தக்காளி - 1 
  4. புளி கரைசல் - 1 கப்
  5. சின்ன வெங்காயம் தேவைக்கு 
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

  • காய்ந்த மிளகாய் - 10
  • தனியா - 1 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு - 10
  • கசகசா - 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 5
  • பூண்டுப்பல் - 1


தாளிக்க:


  • பட்டை - 1 துண்டு 
  • கிராம்பு - 3 
  • பிரியாணி இலை - 2 
  • ஏலக்காய் -2 
  • கறிவேப்பிலை


செய்முறை : 

  • ஆட்டு இறச்சியை (மட்டனை) சுத்தம் செய்து சிறிந்தளவு நீரில் வேகவைக்கவும்.
  • பூண்டு, வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். 
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெங்காயம்,பூண்டை தவிர சிறிது எண்ணெயில் வறுத்து ஆறவைத்து வெங்காயம், பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும். 
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசல், உப்பு, வேகவைத்த மட்டன் சேர்த்து கொதிக்கவைக்கவும். 
  • சிறு தீயில் வைத்து 20 நிமிடம் கழித்து கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.




 

Saturday 19 February 2011

ICC Cricket World Cup Match Date Time Schedule



DATETIMEMatch DetailsVenue
Feb 19,201114:30Bangladesh vs India D/NMirpur
Feb 20,201109:30Nеw Zealand vs KenyaChennai
Feb 20,201114:30Sri Lanka vs Canada D/NHambantota
Feb 21,201114:30Australia vs Zimbabwe D/NAhmedabad
Feb 22,201114:30England vs Netherlands D/NNagpur
Feb 23,201114:30Pakistan vs Kenya D/NHambantota
Feb 24,201114:30South Africa vs West Indies D/NDelhi
Feb 25,201109:30Bangladesh vs IrelandMirpur
Feb 25,201114:30Australia vs Nеw Zealand D/NNagpur
Feb 26,201114:30Pakistan vs Sri Lanka D/NColombo
Feb 27,201114:30India vs England D/NKolkata
Feb 28,201109:30Canada vs ZimbabweNagpur
Feb 28,201114:30West Indies vs Netherlands D/NDelhi
Mar 1,201114:30Sri Lanka vs Kenya D/NColombo
Mar 2,201114:30England vs Ireland D/NBangalore
Mar 3,201109:30South Africa vs NetherlandsMohali
Mar 3,201114:30Pakistan vs Canada D/NColombo
Mar 4,201109:30Nеw Zealand vs ZimbabweAhmedabad
Mar 4,201114:30Bangladesh vs West Indies D/NMirpur
Mar 5,201114:30Australia vs Sri Lanka D/NColombo
Mar 6,201109:30South Africa vs EnglandChennai
Mar 6,201114:30India vs Ireland D/NBangalore
Mar 7,201114:30Canada vs Kenya D/NDelhi
Mar 8,201114:30Pakistan vs Nеw Zealand D/NKandy
Mar 9,201114:30India vs Netherlands D/NDelhi
Mar 10,201114:30Sri Lanka vs Zimbabwe D/NKandy
Mar 11,201109:30West Indies vs IrelandMohali
Mar 11, 201114:30Bangladesh vs England D/NChittagong
Mar 12,201114:30India vs South Africa D/NNagpur
Mar 13,201109:30Nеw Zealand vs CanadaMumbai
Mar 13,201114:30Australia vs Kenya D/NBangalore
Mar 14,201109:30Bangladesh vs NetherlandsChittagong
Mar 14,201114:30Pakistan vs Zimbabwe D/NKandy
Mar 15,201114:30South Africa vs Ireland D/NKolkata
Mar 16, 201114:30Australia vs Canada D/NBangalore
Mar 17,201114:30England vs West Indies D/NChennai
Mar 18,201109:30Ireland vs NetherlandsKolkata
Mar 18,201114:30Sri Lanka vs Nеw Zealand D/NMumbai
Mar 19,201109:30Bangladesh vs South AfricaMirpur
Mar 19,201114:30Pakistan vs Australia D/NColombo
Mar 20,201109:30Zimbabwe vs KenyaKolkata
Mar 20,201114:30India vs West Indies D/NChennai
Mar 23,201114:301st Quarter Final D/NMirpur
Mar 24,201114:302nd Quarter Final D/NColombo
Mar 25,201114:303rd Quarter Final D/NMirpur
Mar 26,201114:304th Quarter Final D/NAhmedabad
Mar 29,201114:301st Semi Final D/NColombo
Mar 30,201114:302nd Semi Final D/NMohali
Apr 2,201114:30Final D/NMumbai



Enhanced by Zemanta

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்


  1. சிக்கன் - 1/2 கிலோ 
  2. பாஸ்மதி அரிசி - 4 கப் 
  3. வெங்காயம் - 2 பெரியது 
  4. தக்காளி - 3 
  5. பச்சை மிளகாய் - 6 
  6. புதினா - 1 கட்டு 
  7. கொத்தமல்லி - 1 கட்டு 
  8. மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
  9. மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் 
  10. பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன் 
  11. தயிர் - 250 கிராம் 
  12. பட்டர் - 100 கிராம் 
  13. உப்பு+எண்ணெய் = தேவைக்கு 
  14. தேங்காய் - 1/2 மூடி 
  15. இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன் 
  16. இஞ்சி - 1 துண்டு 
  17. எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்


தாளிக்க
  • பட்டை - 1 துண்டு 
  • கிராம்பு - 4 
  • ஏலக்காய் - 3 
  • பிரிஞ்சி இலை - 4


செய்முறை :  
 
  • சிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர், பிரியாணிமசாலாபொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.
  • (வெங்காயம், தக்காளி) நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
  • (புதினா, கொத்தமல்லி) சுத்தம் செய்து வைக்கவும். 
  • அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • தேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.
  • குக்கரில் பட்டர் அல்லது எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை(கிராம்பு - 4, ஏலக்காய் - 3, பிரிஞ்சி இலை - 4)போட்டு தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், இஞ்சி, பூண்டுவிழுது, தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஊறவிட்டசிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.
  • 1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு, ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.
  • சிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு + அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்) + உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.
  • குக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.
  • ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.

பன்னீர் டிக்கா

தேவையான பொருட்கள்:


  1. நீளமாக நறுக்கிய பன்னீர் துண்டுகள் - 15
  2. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் 
  4. சீரகத்தூள் - கால் ஸ்பூன் 
  5. கரம் மசாலா - கால் ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய்
  10. ரஸ்க் தூள் தேவையான அளவு 


செய்முறை :  


பன்னீர்,எண்ணெய்,ரஸ்க்தூள் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையில் பன்னீர் துண்டுகளை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பன்னீர் துண்டுகளை ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Friday 18 February 2011

முட்டை பாண் பிரியாணி

தேவையான பொருட்கள்

 
பாண் -1 இறாத்தல்

முட்டை- 5

இறால் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ கிராம்

கறிமிளகாய் - 50 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

தக்காளிப் பழம் - 2

இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

தக்காளிச் சோஸ் - 3 மேசைக்கரண்டி

சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி

மாஜரின் - 50 கிராம்


எண்ணெய் - 500 மில்லி லீற்றர்

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு



செய்முறை :  

முதலில் உருளைக் கிழங்கு, கறிமிளகாய், வெங்காயம் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். பின் பச்சை மிளகாயை சிறிதாக கீறவும். தாச்சியில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கினை நன்றாக வேகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். பின் பாணை சிறு சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

இறாலை சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொரித்து வைக்கவும். தக்களிப் பழத்தை மிக்ஸியில் இட்டு கூழாக அரைக்க வேண்டும். பின் முட்டையில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தாச்சியில் மாஜரீனை இட்டு மாஜரீன் நன்கு சூடாகியதும் அதில் முதலில் கடுகை இட்டு அது வெடித்தவுடன் இஞ்சிப்பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின் அதனுடன் வெங்காயம், கறிமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக இட்டு வறை போல நன்றாகக் கலக்கவும். பின் தக்களிக் கூழினை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின் உருளைக் கிழங்கை, இறால், உப்பு, தக்காளிச் சோஸ், சோயாச் சோஸ் என்பவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கலவை திரண்டு வந்ததும் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துள்ள பாணை இட்டு நன்றாக பிரட்ட வேண்டும். சுவையானதும் ஆரோக்கியமானதுமான முட்டை பாண் பிரியாணி ரெடி!

சூடுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
 


 

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பொலிவு பெறும்.




பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் இரசாயனங்களால், அந்த நேரத்துக்கு நல்லாயிருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல முக அழகு கெட்டுவிடும் என்று எண்ணுபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தவாறு நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும்.
இதோ சில டிப்ஸ் உங்களுக்காக எண்ணெய் சருமத்திற்கான பேஸ் மாஸ்க் மூன்று டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஷியல் ஒயில் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும்.
இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய்ப் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும். இந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது.
வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமா, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஒயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்தக் கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். மென்மையான (சென்சிடிவ்)சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஒயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஒயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.

Monday 14 February 2011

அருளுடைமை

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள.

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்;

ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.



நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய்

விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.



அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில்

உழலமாட்டார்.



மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை.

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக்

கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.



அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு

மல்லன்மா ஞாலங் கரி.

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம்

என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.



பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும்,

கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.



அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்

கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை

உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.



பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்;

மீண்டும் பெற இயலாது.



தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா?

அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.



வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர்

முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

புகழ்

ஈ.த லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு.

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு

ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.



உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்

றீவார்மேல் நிற்கும் புகழ்.

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று

வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.



ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது

புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.



நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு.

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய

பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.



நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை

வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான

ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.



தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

எந்தத் துறையில் ஈ.டுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள்

அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.



புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்.

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள

வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?



வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே

வந்த பழியென்று வையம் கூறும்.



வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல

விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும்

வாழாததும் ஒன்றுதான்.