Monday 26 September 2011

இந்தியாவில் அதிசயம் : உயிருள்ள பாலங்கள் (படங்கள் இணைப்பு)

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர்.
இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை.
 

Saturday 10 September 2011

Sony அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட்

சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன.  இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.  அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.  தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது ‘சொனி’.  சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது.  டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன.  இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான ‘ஹனிகோம்’ ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.  இதில் ‘பி’ இன் வடிவம் டெப்லட் சந்தைக்கு புதியது.  இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் மடித்து வைத்துக் கொள்ள முடிவதனால் எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென சொனி தெரிவிக்கின்றது. இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள்..

 
Android 3.1 Honeycomb
9.4-inch screen
1280 x 800 resolution
512MB RAM
16GB memory
NVIDIA Tegra 2 processor
Front and rear cameras
WiFi and 3G compatible
Work as remote control on Sony products
Price – £399
செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது
Android 3.2 Honeycomb
Two 5.5-inch screens
Two 1024 x 480 pixel displays
RAM unknown
16GB memory
NVIDIA Tegra 2 processor
Book-style layout
WiFi and 3G compatible
Price – £479
நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
சந்தையில் முன்னணியில் இருக்கும் அப்பிள் டெப்லட்களுக்கு இவை தகுந்த போட்டியளிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

1000 பெண்களின் மார்புகளை தொடும் இளைஞன்! (அதிர்ச்சி வீடியோ)

ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவன் அண்மையில் ரஸ்ய பிரதமர் விளாடிமர் புட்டீன்  அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தான். இதன்போது அவருடன் கைகுலுக்கு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கும் சந்தர்பம் அந்த இளைஞனுக்கு கிடைத்தது. அவருடன் கைகுலுக்கி கொண்ட கைகளாலயே 1000 பெண்களின் மார்புகளை தொடவேண்டமென முடிவுசெய்தான் இந்த இளைஞன்.  பல காணொளிகளை நகச்சுவையாக எடுத்து இணையத்தில் உலாவவிடும் இந்த இளைஞன் தான் பெண்களின் மார்புகளை தொடும் காட்சிகளையும் படமெடுக்க முடிவுசெய்து காரியத்தில் இறங்கினான். இதற்காக வீதியில் சென்ற அழகழகான பெண்களின் மார்பகங்களை அவர்களின் அனுமதியுடன் லாவகரமாக பிடித்து சாதித்துள்ளான் இந்த இளைஞன்.இதற்கு தமது முற்று முழுதான பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள் அந்த மேலைத்தேய நாட்டு பத்தினிப்பெண்கள். இச்சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட 1000 பெண்களின் 2000 மார்புகளை தொடும் காட்சிகள் அடங்கிய முழு காணொளியும் உங்களுக்காக தந்துள்ளோம். பார்த்துவிட்டு தயவுசெய்து யாரும் இதை முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கின்றோம்.  எங்கள் பெண்கள் கற்புக்கரிசிகள் எச்சரிக்கை!

Wednesday 31 August 2011

Mangatha









Banner: Cloud Nine Movies
Cast: Ajith
Direction: Venkat Prabhu
Production: Dhayanithi Alagiri
Music: Yuvan Shankar Raja



Sunday 28 August 2011

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஓன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம், இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
ஓன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.
இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதாக ஒரே சொடுக்கில் செய்யலாம்.
கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.
புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம். நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஓன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம்.

இணையதள முகவரி

YouTube

வீடியோக்கள் பாடல் வரிகளுடன் தோன்றுவதற்கு

கூகுளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள்.

இதில் வீடியோ பாடல்கள் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம்.

ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.

1. Lyrics for Firefox: யுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பொக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது.

இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன.

சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பொக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். பின்னர் யுடியூபில் வீடியோ பார்க்கும் போது அதன் அருகிலேயே சைட்பாரில் Lyrics என்ற இடத்தில் பாடல்வரிகளைக் காண்பிக்கும்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/lyrics/

2. Chrome - Music video lyrics for Youtube: நீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பொக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்கவில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும்.

பிறகு குரோம் உலவியில் யுடியூபில் ஏதேனும் வீடியோ பார்க்கும் போது அதற்குப் பொருத்தமான பாடல் வரிகள் இருந்தால் உலவியின் மேல்பகுதியில் அட்ரஸ்பாரில் இருக்கும் ஐகான் Lyrics என்று காட்டும். அதைக் கிளிக் செய்தால் பாடல் வரிகள் காட்டப்படும்.

https://chrome.google.com/webstore/detail/hbegdicajmjmehcembhmpijdfdofobbh?hl=en-US

Friday 19 August 2011

Engeyum kadhal


Deiva thirumagal


Monday 8 August 2011

Avan Ivan



Harry Potter and the Deathly Hallows


Azhagarsamiyin Kudhirai - DVD


24 Redemption



Saturday 23 July 2011

உடற்பயிற்சியும் சில உண்மைகளும் !


உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.
 மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் “பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்” என்றும், மற்றும் சில விளம்பரங்கள் “தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்” என்று கூறுகின்றன.



இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.




கருத்து : 1

தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.இது ஒரு தவறான கருத்து.நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.

இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.



கருத்து : 2

வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது. இதுவும் தவறான கருத்து.எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல் மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.

ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து : 3

எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதுவும் ஒரு தவறான கருத்து.வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.

வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும்.
இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து : 4


நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று. உண்மை.

நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.
இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.

ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து : 5

ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.
மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.
ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.
எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து : 6

தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும். இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து : 7

நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும். சரியான கருத்து.
உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள்.
அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

கருத்து : 8

ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.
நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.

குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும்.

சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.
Enhanced by Zemanta

Tuesday 12 July 2011

Hidden Camera

Monday 11 July 2011

System Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு

கணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.
சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன.
இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper.
இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.
பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.
உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல.
கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி

Sunday 29 May 2011

புற்று நோய்

புற்று நோய்.
`யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

புற்று நோய்க்கு என்ன காரணம்?
பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று:  
புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

 





நுரையீரல் புற்று:  

புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

`ஹியூமன் பபிலோமா வைரஸ்' (Human Papilloma Virus - H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?
முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை:
1. ஆபரேஷன்,
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்),
3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).

Tuesday 10 May 2011

vaanam




Banner: Cloud Nine Movies, VTV Productions, Magic Box Pictures
Production: Dayanidhi Azhagiri, Ganesh
Direction: Krish
Star-casts: Simbu, Bharath, Anushka, Prakash Raj, Sonia Agarwal, Santhanam, Ganesh, Jayaprakash, Saranya, Vega, Jasmine and others
Music: Yuvan Shankar Raja
Cinematographer: Nirav Shah
Editing: Anthony

Wednesday 4 May 2011

Kavalan


Mappillai



Cast: Dhanush, Hansika Motwani, Manisha Koirala
Direction: Suraaj
Production: Kalanidhi Maran
Music: Mani Sharma

KO

Star Cast : Jeeva, Ajmal Ameer, Karthika Nair, Piaa Bajpai, Prakash Raj, Sona Heiden and others
Director : K.V Anand
Producer : Jayaraman
Banner : Red Giant Movies
Music : Harris Jayaraj

Wednesday 13 April 2011

Gags: Bikini Car Wash Special

கோப்புகள் உருவாக்கப்பட்ட திகதியை மாற்ற


நாம் கணணியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாக்குவதாக வைத்துக் கொள்ளுவோம்.


அவ்வாறு உருவாக்கிய உடன் அதன் Properties சென்று பார்த்தால் நாம் கோப்பை உருவாக்கிய திகதி- நேரம் ஆகியவை தெரிய வரும். முன்திகதியிட்டு உருவாக்கிய கோப்பின் திகதியை சில நேரங்களில் மாற்ற வேண்டி வரலாம்.


அந்த சமயங்களில் நமக்கு இந்த சின்ன மென்பொருள் உதவிக்கு வரும். முதலில் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் திகதி மாற்ற வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும்.


இதில் உள்ள Simple Change File Date என்பதனை கிளிக் செய்து தேவையான திகதியை கொண்டு வாருங்கள். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் ஓ.கே கொடுங்கள்.


இப்போது உங்களது கோப்பினை திறந்து அதன் Properties பாருங்கள். உங்களது கோப்பின் திகதி மாறிவிட்டிருக்கும்.

தரவிறக்க சுட்டி

Saturday 9 April 2011

Vaanam


Cable Raja.MP3
Evan Di Una Pethan.MP3
No Money No Honey.MP3
Vaanam.MP3
Who I Am.MP3





Banner: VTV Productions & Magic Box Pictures

Cast: Silambarasan,Bharath,Anushka Shetty,Prakash Raj,Sneha Ullal,Vega Tamotia,Santhanam & Sonia Agarwal

Direction: Krish

Production: R.Ganash

Music: Yuvan Shankar Raja

Lyricis: Silambarasan, Yuvanshankar Raja & Na. Muthukumar


Wednesday 30 March 2011

கைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது.

அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தியாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.

கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Friday 18 March 2011

மாப்பிள்ளை


New Tamil Mp3
Aaru Padai
Ennoda Rasi
Love Love
Mappillai Theme
Onnu Rendu
Ready Readya
Ready Readya (Re-mix)


Banner: Sun Pictures

Cast: Danush & Hansika Motwani

Direction: Suraaj

Production: Kalanidhi Maran

Music: Mani Sharma

Lyricis: Viveka, P.a Vijay & Snehan

Tuesday 15 March 2011

மொடல் அழகியின் மார்பகத்தை கடித்த பாம்பு விஷமேறி உயிரிழப்பு

 
மொடல் அழகியொருவரின், சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கப்பட்ட மார்பகத்தை எதிர்பாராவிதமாக கடித்த பாம்பொன்று நச்சுத் தன்மையால்  உயிரிழந்துள்ளது.

இஸ்ரேலிய மொடல் அழகியான ஒரிட் பொக்ஸ் என்பவர் ஸ்பெனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டபோது,  பாம்மை கையில் பிடித்து அதனது முகத்தை முத்தமிடுவதற்கு முயன்றுள்ளார்.

ஆனால், அந்த பாம்பானது ஆத்திரமடைந்து மொடல் அழகி பொக்ஸின் பெரிய மார்பை கவ்விக்கொண்டது.

ஓரிட் பொக்ஸ் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துக் செல்லப்பட்டார். ஆனால் அவர் நீண்ட கால விபத்தை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை கடித்த பாம்பு உயிரிழந்துள்ளது. ஓரிட் பொக்ஸின் மார்பகங்களை  பெரிதாக்குவதற்காக சத்திரசிகிச்சை மூலம் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலிக்கனை பாம்பு கடித்ததால் பாம்பின் உடலில் விசமேறியதே இதற்குக் காரணமாம்..

இஸ்ரேலில் பொக்ஸ் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள பல தடவை சத்திரசிகிச்சை செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Monday 14 March 2011

உங்கள் Yahoo கணக்கை ஜிமெயிலில்(Gmail) தொடர

(படித்ததில் பிடித்தது)
நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கின் மூலம் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள்.
ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள்.
இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் கணக்கை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
தொடரும் அடுத்த திரையில் உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் இம்போர்ட் செய்ய வேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்த பின்னர் Start Import பட்டனை கிளிக் செய்யவும். அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

உங்களது முக்கியமான கோப்புகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க

நாம் சில முக்கியமான கோப்புகளை வைத்து இருப்போம். அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம்.
எடுத்துக்காட்டாக Word Document, Excel Worksheet, PowerPoint Presentation, Pdf, mp3, video, softwares, games போன்றவைகள் இருக்கலாம். இப்படியான சில முக்கியமான கோப்புகள் யாரிடமும் சென்று விடக் கூடாது என்று சில நேரங்களில் நாம் நினைக்கலாம். அடுத்தவர் உங்கள் கோப்புகளை திருடாமல் இருக்க இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.
இதற்கு எல்லாம் மென்பொருளா? சாதாரணமாக ஒரு Hidden செய்தால் போதும் தானே அல்லது அந்த நேரத்தில் குறிப்பிட்ட கோப்பை அழித்து விட்டு அல்லது cut செய்து வைத்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். இது நமக்கு சிரமத்தைத் தான் ஏற்படுத்தும்.

1. இந்த மென்பொருளை கணணியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.
2. இதற்குறிய password முற்றிலும் வித்தியாசமானது. அதாவது இங்கு password ஆக பயன்படுவது Text Document ஆகும். என்ன புரிய வில்லையா? உங்களுடைய folder ஐ திறக்க வேண்டும் என்றால் Right click செய்து New > New Text Document இந்த கோப்பை உருவாக்கினால் தான் உங்களுடைய folder open ஆகும்.
இதற்கு முதலில் download செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான இடத்தில் இதனை நிறுவிக் கொள்ளுங்கள்.
Folder Personal என்பதனை open செய்யவும். ஏதாவது ஒரு கீயை அழுத்தவும். இப்போது Personal என்ற ஒரு Folder உருவாகி இருக்கும். அதில் முக்கியமான கோப்புகளை காப்பி செய்து விட்டு folder ஐ மூடி விடுங்கள்.
மீண்டும் Folder Personal என்பதனை open செய்து ஏதாவது ஒரு கீயை அழுத்தவும் அந்த Folder Lock ஆகிவிடும்.
Unlock செய்வதற்கு குறிப்பிட்ட இடத்தில் அதாவது Folder Personal.exe இருக்கும் இடத்தில் New Text Document இந்த பைல் இருந்தால் மாத்திரமே Unlock செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி ஐந்து முறை மாத்திரமே unlock செய்து கொள்ள முடியும். அடுத்த முறை unlock செய்யும் போது Register பண்ண வேண்டும் என்ற செய்தி தோன்றும் என்பதனை மறந்து விடாதீர்கள்.
 தரவிறக்க சுட்டி