Tuesday 15 March 2011

மொடல் அழகியின் மார்பகத்தை கடித்த பாம்பு விஷமேறி உயிரிழப்பு

 
மொடல் அழகியொருவரின், சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கப்பட்ட மார்பகத்தை எதிர்பாராவிதமாக கடித்த பாம்பொன்று நச்சுத் தன்மையால்  உயிரிழந்துள்ளது.

இஸ்ரேலிய மொடல் அழகியான ஒரிட் பொக்ஸ் என்பவர் ஸ்பெனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டபோது,  பாம்மை கையில் பிடித்து அதனது முகத்தை முத்தமிடுவதற்கு முயன்றுள்ளார்.

ஆனால், அந்த பாம்பானது ஆத்திரமடைந்து மொடல் அழகி பொக்ஸின் பெரிய மார்பை கவ்விக்கொண்டது.

ஓரிட் பொக்ஸ் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துக் செல்லப்பட்டார். ஆனால் அவர் நீண்ட கால விபத்தை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை கடித்த பாம்பு உயிரிழந்துள்ளது. ஓரிட் பொக்ஸின் மார்பகங்களை  பெரிதாக்குவதற்காக சத்திரசிகிச்சை மூலம் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலிக்கனை பாம்பு கடித்ததால் பாம்பின் உடலில் விசமேறியதே இதற்குக் காரணமாம்..

இஸ்ரேலில் பொக்ஸ் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள பல தடவை சத்திரசிகிச்சை செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.