Thursday 30 September 2010

tamil video song

Wednesday 29 September 2010

Cookery Chicken Sandwich


Cookery Nadan Chicken Roast


Cookery Chicken Pagoda

Cookery Stuffed Brinjal Fry

Cookery Snakegourd kootu

Cookery Bonda

Cookery Prawn Masala

Cookery Ridge Gourd Masala

Cookery Potato Masala

How to make Vegetable Omelette

Cookery Mixed Vegetable Side Dish

Tuesday 21 September 2010

old hits


Satti suttathada


Ullathil Nalla Ullam


Veeduvarai Uravu


Pallakku Vaanga Ponen



Ponal Pogattam

Video Song

Unnai Paartha Pinbu






Povomaa Oorkolam






Deivam Thantha Veedu


Saturday 18 September 2010

அம்மா என்றால் அன்பு

 அம்மா. இந்த வார்த்தையை கேட்டால் நம்மைஅறியாமல் உற்சாகம் வரும். படுபாதக செயல் செய்கிறவன்கூட அம்மா முகத்தை பார்த்ததும் சாந்தமாகிவிடுவான். இதற்கு காரணம் என்ன? தாயின் மனநிலைக்கும் குழந்தையின் மூளை செயல்பாடுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தின. 35 வயதை ஒட்டியிருந்தவர்களை வைத்து ஆய்வு நடந்தது. அறிமுகம் இல்லாத சிலரது போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அப்பா, அம்மாவின் போட்டோக்களும் காட்டப்பட்டன. அவற்றை பார்க்கும்போது மூளையில் அடையும் மாற்றம் எம்.ஆர்.ஐ. உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. அப்பா போட்டோ பார்ப்பதைவிட அம்மா போட்டோவை பார்க்கும்போது மூளையின் உணர்தல் மற்றும் உணர்ச்சி அதிகமானது. அதாவது, அம்மாவை பற்றிய தகவல்களை கேள்விப்படும்போது பல்பின் பிரகாசம்போல் மூளை பளிச்சென சுறுசுறுப்பாகிறது.
பிறந்த பிறகு முதல்முறை அழுவது, முதல் முறை பால் குடிப்பது, முதல் முறை சிரிப்பது, கத்துவது, நடப்பது, பேசுவது என எல்லாமே குழந்தைக்கு புதிய, த்ரில்லான அனுபவம்தான். இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு பக்கபலமாக இருந்த அம்மாவின் நினைவும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவள் நம்மை அரவணைத்துக் கொண்டதும் மூளையில் ஆழமாக பதிவாகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பதிவுகள் மறைவதில்லை. அதனால்தான், எத்தனை வயதானாலும் அம்மா என்றதும் மலர்ச்சி அடைகிறோம்.
கைக்குழந்தையை வளர்க்கும் காலக்கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். டென்ஷனாக, கவலையாக இருந்தால் அது குழந்தையின் அறிவாற்றலை பாதிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

3-ம் உலகப் போர் மூளும்

14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.

சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.

இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார்.

அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது.

இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார்.

நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.

அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.

2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.

2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.

இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Monday 13 September 2010

Carrie y sus Trucos


DANCING DOG

Dancing Merengue Dog


Sunday 12 September 2010

கொழுக்கட்டை - கார வகை

தேவையான பொருட்கள் :


1. அரிசி மாவு ஒரு ஆழாக்கு
2. உளுத்தம்பருப்பு 200 கிராம்
3. காய்ந்த மிளகாய் 10 அல்லது 12
4. பெருங்காயம் சுண்டைக்காய் அளவு
5. உப்பு 1 1/2 ஸ்பூன்
6. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
7. கடுகு 1 ஸ்பூன்
8. சமையல் எண்ணெய் 50 கிராம்


செய்முறை :

1. இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

2. உளுத்தம்பருப்பு ஒரு ஆழாக்கு, காய்ந்த மிளகாய் 10, உப்பு, கொஞ்சம் பெருங்காயம். உளுந்தை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும்.

3. ஊறிய உளுத்தம் பருப்புடன், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைக்க வேண்டும்.

4. அரைத்த விழுதைக் குக்கரில் வைத்து வெயிட் போட்டு 5 நிமிடம் வேக வைவிட வேண்டும்.

5. வெந்த மாவு ஆறியவுடன் உதிர்த்துக்கொண்டு வாணலியில் சற்று தாராளமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த விழுதைப் போட்டுக் கிளற வேண்டும்.

6. இப்போது காரக் கொழுக்கட்டைக்கு பூரணம் தயார். இந்த பூரணம் ஆறியவுடன் ருசிக்காக ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழியலாம்.

7. இனிப்புக் கொழுக்கட்டை போலவே அரிசி மாவை எடுத்து கிண்ணம் செய்து காரப் பூரணத்தை வைத்து மூடி குக்கரில் இட்லி தட்டில் வேக வைக்க வேண்டும்.

கூந்தலின் வளர்ச்சிக்கு

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்
கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்
தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.
ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

தண்ணீரை மாற்றினால்!
வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ளூர் தண்ணீரை குடித்துவிட்டு, வெளியூர் தண்ணீர் குடித்தால், ஒத்துக்கொள்ளாது என்பது சிலருக்கு தெரியாது. குடித்த பின்னர் தொல்லை வரும் போதே உணர்வர். சிலர் ஊர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும் போது, அவர்கள் குளிக்க பயன்படுத்து தண்ணீர் தன்மையும் மாறுகிறது. இதனால், பாதிக்கப்படுவது அவர்களின் தலைமுடி தான்.
கவலைப்பட்டாலும்...
மேற்கண்ட இரண்டைக் காட்டிலும், முக்கியமானது கவலை தான். ஒருவரின் கவலை தான், அவரின் தலைமுடி கொட்டவும் காரணம். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும்.
இதுக்கு என்ன செய்யணும்?
தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த "டைப்" என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள "டீப் கிளீன்சிங்" ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தினால் நல்லது.
வழுக்கை விழுதே...
ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு "முடி"வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகிவிடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.
முடிவெட்ட நாலணா
நாலணா கொடுத்து தலைமுடியை கத்தரித்துக்கொள்ளும் காலம் போய்விட்டது; சிகையலங்கார கூடத்தில் போய் முடிவெட்டும் போக்கு, இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பியூட்டி பார்லர் போகாத பள்ளிச்சிறுமிகள் இல்லை. அந்த அளவுக்கு அழகாக்கிக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
மாதம் பல ஆயிரம் வரை செலவழிப்பவர்களும் உண்டு. அதனால், சந்தையில் கண்ட கண்ட ஆயில்கள், ஷாம்பூக்கள் குவிந்து வருகின்றன. தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள், இந்த தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வரும் ஆபத்து குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.
புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் முடி, ஆயில் முடியா, வறண்ட முடியா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதோ எளிய வழி. ஒரு "பிளாட்டிங்" பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். தலைமுடியில் மிதமாக அழுத்தி, ஒரு நிமிடம் வரை வைத்திருங்கள். இப்போது எடுத்துப்பாருங்கள்; பேப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால், உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று பொருள். அப்படியில்லாமல், பேப்பரில், தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால், உங்கள் தலைமுடி, வறண்ட தன்மை கொண்டது.
நீண்ட கூந்தலா?
நீங்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணியாற்றுகிறீர்கள் என்றால், உங்களால், தலைமுடியை பராமரிக்க போதுமான நேரம் இருக்காது. அதனால், தோளில் பரவும் வகையில் தலைமுடியை குறைத்துக்கொள்ளலாம். முடியை எப்போதும் "ட்ரிம்" செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வறண்டுபோய் விடும். கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்த தெரிய வேண்டும்.
கலரிங் கொடுமை
ஆண், பெண்களில் கலரிங் என்ற பெயரில் பெரும் கொடுமை நடக்கிறது. தரம் குறைவான பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தவே கூடாது. ஆரம்பத்தில், முடியை பார்க்க பேஷனாகத்தான் இருக்கும். போகப்போக, கேவலமாக போய்விடும்.
எந்த சத்து தேவை?
முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் "பெர்ரட்டின்" அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.

மாசு மருவற்ற முகம் வேண்டுமா?


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான்.மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:

பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும்.
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
நகை அணிந்து கருத்துப்போய் உள்ள கழுத்துப்பகுதிகளிலும் தடவினால் கருப்பு நிறம் மாறும்.
மஞ்சள் தூள் - 10 கிராம் எடுத்து, அதனுடன் ஆரஞ்சு சாறு 100 மில்லி கலந்து முகம் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் மற்றும், வெயிலால் கருத்துப்போன பகுதிகள் நிறம் மாறும்.
கேரட் சாறு - 50 மி.லி., அன்னாசிப்பழச் சாறு - 50 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கருத்தப் பகுதிகள் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு 1 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கருமை மாறி முகம் பளிச்சிடும்.
ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.
சந்தனத்தூள் - 10 கிராம், எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் குளிப்பதற்கு முன் உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
வறண்ட முகம் பளபளக்க:
கறிவேப்பிலையையும், மருதாணி இலைகளையும் தனித்தனியே நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, 
கறிவேப்பிலை பொடி 1/2 டீஸ்பூன், மருதாணி பொடி 1/2 டீஸ்பூன் எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
தேன் - 1 டீஸ்பூன், தக்காளிச்சாறு - 1 டீஸ்பூன் எடுத்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூச கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண் ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. 

கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது. ஏனென்றால், அவர்களின் தோலின் துளைகளில் அதிகளவு 'செபம்' நிறைந்து காணப்படுகிறது.
* முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல்.
* முறையாக சுத்தம் செய்யாதது.
* தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள்:
* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும். முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.
* ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
* ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).
தோல் சிகிச்சை நிபுணரிடம் மேற்கொள்ளும் சிகிச்சை:
மீசோதெரபி மற்றும் மீசோபோடக்ஸ்:
இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற, இது போதும் என்ற திருப்தியான மனதுடன் இருப்பவர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்படும் கடலை மாவு, மஞ்சள் பொடியே போதும்.

Friday 10 September 2010

Crime Dairy


Friday 3 September 2010

Charming Ceylon 1931(Sri Lanka)


Prakash Raj Pony Verma Wedding

Niyam 02-09-2010

Jodi No 1 Season 4 - Final

Thursday 2 September 2010