Sunday 31 October 2010

People Are Awesome

funny child

Thursday 28 October 2010

Funny Video Collection

Windows 7 & Shortcut Keys

Monday 25 October 2010

Tamil Tutotials


Comedy


Sunday 24 October 2010

(goa) Tamil Move



Friday 15 October 2010

Mr. Bean

Architettura

Thursday 14 October 2010

One Man Army?

Parking Lot Game

Bal Ganesh


Tamil cartoon story


Monday 11 October 2010

தமிழ் பழமொழி

  1. இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
  2. தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
  3. கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
  4. கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
  5. அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
  6. அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
  7. அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
  8. ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
  9. இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
  10. ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
  11. அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
  12. அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு
  13. அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
  14. அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
  15. படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
  16. அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
  17. ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்
  18. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு
  19. அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்
  20. அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்
  21. புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம் அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
  22. பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால் பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள் நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
  23. ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
  24. பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
  25. நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை
  26. ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்
  27. மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு
  28. உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
  29. முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
  30. சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
  31. சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
  32. எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
  33. அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்
  34. உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
  35. சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
  36. அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
  37. மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
  38. நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்
  39. எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
  40. கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்
  41. இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்
  42. உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
  43. எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
  44. ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
  45. நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
  46. ஜன்னல்கள் வழிகாட்டும்
  47. ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்
  48. அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
  49. எஜமானனை கீழே தள்ளாமல் விடாது
  50. அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
  51. காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
  52. ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
  53. செவிடன் இருமுறை சிரிப்பான்
  54. ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
  55. பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்
  56. ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்
  57. பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
  58. தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்
  59. குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்
  60. அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
  61. பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்
  62. குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
  63. அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்
  64. ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
  65. அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்
  66. தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
  67. காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை
  68. கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
  69. மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
  70. செல்லத் துள்ளி ஓடுகிறான்
  71. வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
  72. தோண்டிக்கொள்கிறான்
  73. இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
  74. உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
  75. ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
  76. மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
  77. உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை
  78. நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
  79. மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
  80. பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
  81. மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
  82. மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
  83. தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
  84. பழமொழியில் உமி கிடையாது

Wednesday 6 October 2010

sri lanka Travel Links

























தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண் ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. 


கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது. ஏனென்றால், அவர்களின் தோலின் துளைகளில் அதிகளவு 'செபம்' நிறைந்து காணப்படுகிறது.
* முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல்.
* முறையாக சுத்தம் செய்யாதது.
* தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள்:
* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும். முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.
* ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
* ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).
தோல் சிகிச்சை நிபுணரிடம் மேற்கொள்ளும் சிகிச்சை:
மீசோதெரபி மற்றும் மீசோபோடக்ஸ்:
இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற, இது போதும் என்ற திருப்தியான மனதுடன் இருப்பவர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்படும் கடலை மாவு, மஞ்சள் பொடியே போதும்.


Saturday 2 October 2010

Akon

Endhiran