Monday 14 February 2011

புகழ்

ஈ.த லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு.

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு

ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.



உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்

றீவார்மேல் நிற்கும் புகழ்.

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று

வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.



ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது

புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.



நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு.

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய

பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.



நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை

வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான

ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.



தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

எந்தத் துறையில் ஈ.டுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள்

அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.



புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்.

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள

வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?



வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே

வந்த பழியென்று வையம் கூறும்.



வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல

விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும்

வாழாததும் ஒன்றுதான்.